Saturday, June 26, 2010

VAALI

இவ்வளவு நன்றாக கவிதை எழுதும் நீங்கள் ஏன் திரைப்படத்திற்கு வியாபார நோக்கோடு எழுதுகிறீர்கள் என்ற கேள்விக்கு வாலி பதில்:

இங்கே நான்
வண்ணமொழிப் பிள்ளைக்குக்
தாலாட்டும் தாய்;

அங்கே நான்
விட்டெறியும் எலும்புக்கு
வாலாட்டும் நாய்!

மேலும் .. ..

எந்தப்பா சினிமாவில் (which song)
எடுபடுமோ? விலைபெறுமோ?
அந்தப்பா எழுதுகிறேன்; (that song)
என்தப்பா? நீர் சொல்லும்! (is it my mistake)

மோனை முகம் பார்த்து (ethugai - monai meaning following grammar etc)
முழங்கிட நான் முயற்சித்தால்
பானை முகம் பார்த்தென் ( My wife will be looking at the food pot)
பத்தினியாள் பசித்திருப்பாள்

கட்டுக்குள் அகப்படாமல்
கற்பனைச் சிறகடிக்கும்
சிட்டுக்கள் நீங்கள்;
சிறியேன் அப்படியா?

மெட்டுக்குள் கருத்தரித்து
மெல்லவே இடுப்புநோகத்
துட்டுக்குத் தகுந்தவாறு
முட்டையிடும் பெட்டைக்கோழி!

No comments:

Post a Comment