Tuesday, May 5, 2009

இரக்கம்

இரக்கம் - வாலியின் கவிதை

மறியே

செம்மறியே !

மேயப்போகிறாயா ? போ

அதோ அந்த மலையடி பக்கத்தில்

நல்ல மூலிகைகள் மலிந்து கிடக்கின்றன

அவைகளையே மேய் !



தப்பித்தவறி விஷப்பூண்டுகளில்

வாயை வைத்து விடாதே

ரொம்பவும் துள்ளாதே நிதானமாய் போ. . .



உன் முட்டி எலும்புகள் முறிந்து விட்டால்

என் கண்களை முட்டிக்கொண்டு கண்ணீர் வரும்…



உன்னைத் தேடும்படி வைக்காதே !

இருட்டியதும் நீயாகவே

வீடு திரும்பி விடு !



விடியும் வரையில்…அரைத்தூக்கத்தில்

ஆன்ந்தமாக அசைபோடு !

விடிந்தபிறகுதான்…

பக்ரீத் !

1 comment: